Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூலை 20 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்ரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சியில் கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி முதல் காணாமற்போன உருத்திரபுரம், எள்ளுக்காடு, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் யர்சிகா (வயது 03) என்ற சிறுமியின் எலும்புக்கூடு ஞாயிற்றுக்கிழமை (19) மீட்கப்பட்டுள்ளதையடுத்து சிறுமியின் மரணம் தொடர்பாக பல கோணங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக கிளிநொச்சி பொலிஸார் திங்கட்கிழமை (20) தெரிவித்தனர்.
குறித்த சிறுமி காணாமற்போன இடத்திலிருந்து 5 கிலோமீற்;றர் தொலைவிலுள்ள பொறிக்கடவை என்னுமிடத்தில் உள்ள வயல் வெளியிலிருந்து சடலம் மீட்கப்பட்டது. எலும்புக்கூட்டுடன் சிறுமி காணாமற்போகும் போது அணிந்திருந்த ஆடைகள், காலணி என்பன மீட்கப்பட்டன.
குறித்த சிறுமி காணாமற்போன இடத்திலிருந்து அண்மையான தொலைவில் மீட்கப்பட்டமையால், சிறுமி கொலை செய்யப்பட்டாரா?, எவ்வாறு சிறுமி காணாமற்போய் இறந்தார்?, வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு வயல் வெளியில் சடலம் புதைக்கப்பட்டதா? என்ற கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேற்படி கிராமத்திலுள்ளவர்கள் 2 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வாய்க்கால் ஒன்றில் குளிப்பதற்காக தினமும் சென்று வருபவர்கள். இந்த சிறுமியுடன் தாயாரும் வேறு சிலரும் கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி மாலை வாய்க்காலில் குளிப்பதற்காக சென்றிருந்த போதே சிறுமி காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
51 minute ago
56 minute ago
1 hours ago