2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சி, முல்லைத்தீவில் உண்ணாவிரதத்துக்கு அழைப்பு

George   / 2017 ஜனவரி 26 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், வவுனியாவில் நடாத்தப்படும் உணவுத்தவிர்ப்பு போராட்டத்துக்கு, ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாளை  காலை 9 மணியில் இருந்து, மாலை 3 மணிவரை அடையாள உண்ணாவிரதப் போராட்டம், கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் நடைபெறவுள்ளது.

இப்போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் தலைவர்கள். பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள், பொதுஅமைப்பினர், இளைஞர்கள் அனைவரையும் கலந்துக் கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, நாளை காலை 9 மணிக்கு, முல்லைத்தீவு மாட்டச் செயலகத்துக்கு முன்னால், மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் இதில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .