Kogilavani / 2010 செப்டெம்பர் 10 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எல்.தேவ், கே.எஸ்.வதனகுமார்)
விநாயகர் சதூர்த்தி பெருவிழாவை உலகமெல்லாம் அடியார்கள் வெகுவிமர்சையாக அனுஸ்டித்துவருகையில் மட்டக்களப்பில் நான்கு பிள்ளையார் ஆலய சுவாமிகள் ஒரே தீர்த்தக்கேணியில் இன்று தீர்த்தமாடி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இன்று காலை மட்டக்களப்பு, அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்கேணியில் இந்த தீர்த்த உற்வசம் வெகு விமர்சையாக இடம்பெற்றது. சித்திவிநாயகர் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள விநாயகர் ஆலயங்களின் தீர்த்த உற்சவங்களே இன்று இடம்பெற்றன.
மேளவாத்தியங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளில் வீதி வலம் வந்த ஆலயங்களின் விநாயகருக்கு தீர்த்தோற்சவம் மாமாங்க தீர்த்தக்கரையினில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இதனையொட்டி மட்டக்களப்பு நகர் இன்று காலை முதல் விழாக்கோலம் பூண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



----------

------
17 minute ago
38 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
38 minute ago
1 hours ago
2 hours ago