2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஷாருக்கான் தடுப்பு விவகாரம்; இந்தியாவிடம் மன்னிப்பு கோரியது அமெரிக்க தூதரகம்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 14 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் நியூயோர்க் விமான நிலையத்தில் வைத்து பொலிவூட் நடிகர் ஷாருக்கான் தடுத்து வைக்கப்பட்ட விவகாரத்தில், அமெரிக்காவிடம் விளக்கம் கேட்டுள்ளது இந்தியா. இதைத் தொடர்ந்து அமெரிக்க தூதரகம் மன்னிப்பு கோரியுள்ளது.

யேல் பல்கலைக்கழக நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக நடிகர் ஷாருக்கான் தனியார் விமானத்தில் அமெரிக்கா சென்றிருந்தார்.

இதன்பொது விமான நிலைய குடியேற்ற அதிகாரிகளால் அவர் 2 மணித்தியாலம் தடத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பின்பு இந்தியத் தூதரகம் தலையிட்டு அவரை விடுவித்தது. இதையடுத்து இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் மன்னிப்புக் கடிதம் ஒன்றை வழங்கினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X