J.A. George / 2021 ஜூன் 07 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களை விசேட ஸ்டிக்கர் அடிப்படையில் வகைப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
11 நிறங்களில் இந்த ஸ்டிக்கர் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், இன்றைய தினம் கொழும்புக்குள் பிரவேசிக்கும் வீதிகளில் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என அவர் கூறியுள்ளார்.
இதனால் இன்று சிலநேரம் தாமதம் ஏற்படக்கூடும் என்றும் நாளை முதல் அது தவிர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகனமொன்றை பல சோதனைச் சாவடிகளில் நிறுத்த வேண்டிய நிலையை தவிர்க்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார துறையை சார்ந்தவர்களின் வாகனங்களுக்கு பச்சை நிறத்திலான ஸ்டிக்கர் ஒட்டப்படும். முப்படையினர் மற்றும் பொலிஸாரின் வாகனங்களுக்கு இலகு நீல நிற ஸ்டிகர் ஒட்டப்படும்.
50 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago