Sudharshini / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பதிப்புத்துறைக்கு பெரும் பணியாற்றிய துரைவி என அன்புடன் அழைக்கப்படும் அமரர் துரை விஸ்வநாதனின் 84 ஆவது பிறந்தி தின நினைவுப்பேருரையும் துரைவி விருது வழங்கல் நிகழ்வும் எதிர்வரும் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது.
எழுத்தாளர் திரு லெ.முருகபூபதி தலையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், வரவேற்புரையை மேமன்கவி நிகழ்த்தவுள்ளார்.
துரைவி நினைவுப்பேருரையை திரு எம்.வாமதேவன் ''மலையக புனைவு இலக்கியத்தின் தற்காலபோக்கை பற்றி ஓர் அவதானிப்பு '' எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.
இந்நிகழ்வில், 2014ஆம் ஆண்டு வெளிவந்த மொழிபெயர்ப்பு நூல் ஒன்றுக்கும் கட்டுரைத் தொகுப்புக்கும் துரைவி விருது வழங்கி வைக்கப்படவுள்ளது.
நன்றியுரையினை ராஜ்பிரசாத் துரை விஸ்வநாதன் நிகழ்த்தவுள்ளதோடு நினழ்ச்சியினை மல்லியப்பு சந்தி திலகர் தொகுத்தளிக்கவுள்ளார்.
47 minute ago
59 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
59 minute ago
2 hours ago
2 hours ago