Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 23 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி பகுதியில், வீடொன்றில் நடத்தப்பட்டுவந்த பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று இன்று(23) அதிகாலை முற்றுகையிடப்பட்டதுடன் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த பெண்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இக்கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டதாகவும், இதன் போது 15 லீற்றர் கசிப்பும், 140,லீற்றர் கோடாவும், கசிப்பு உற்பத்திசெய்யும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .