Freelancer / 2021 செப்டெம்பர் 18 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சியில் திங்கட்கிழமை முதல் 20 - 30 வயதுப்பிரினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பிக்கப்படுவதாக மாவட்ட தொற்றுநோயியல் வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பாக ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த அவர்,
மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 20-30வயதுப் பிரிவினர் 28,482 பேர் உள்ளனர்.
அவர்களுக்கான முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் திங்கட்கிழமை 20ம் திகதி கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் , தர்மபுரம் மத்திய கல்லூரி , முழங்காவில் ஆதார வைத்தியசாலை , பூநககரி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் தடுப்பூசி ஏற்றும் நடவவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
21ம் திகதி செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலை, அக்கராஜன் மகா வித்தியாலயம், இராமநாதபுரம் மகா வித்தியாலயம் , முழங்காவில் ஆதார வைத்தியசாலை , தர்மபுரம் மத்தியகல்லூரி ,பளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பவற்றிலும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். R
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025