Niroshini / 2021 செப்டெம்பர் 20 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விடத்தல் தீவு, 5ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள், நேற்று (19) மாலை 6.30 மணியளவில், மது போதையில் அத்துமீறி நுழைந்த சுமார் 15 பேர் கொண்ட குழுவினர், குறித்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இதில், குறித்த வீட்டின் உரிமையாளரான அன்டனி ஜோசப் (வயது 44) என்பவர் படுகாயமடைந்த நிலையில், பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த வீட்டில் உள்ள 18 வயதுடைய இதய நோய் உள்ள யுவதி ஒருவரும்,15 வயதுடைய சிறுமி ஒருவரும் தாக்குதலுக்குள்ளான நிலையில், பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், அடம்பன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
29 minute ago
39 minute ago
43 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
39 minute ago
43 minute ago
47 minute ago