Sudharshini / 2015 நவம்பர் 21 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓயாமல் கொக்கரிக்கும் ஒவ்வாம்மை கூட்டம்
பாயாமல் எச்சரிக்கும் இலட்சியப் தமிழினம்
சாயாமல் சுட்டெரிக்கும் வீறு கொண்ட உயிர்பயணம்
காயாமல் இருக்கும் சுயகாப்பு போராட்டதில்
காவியம் படைக்காமல் மாண்டுவிடுமோ இந்த இனம்
காயங்கள் பட்டும் தாகங்கள் தீரவில்லை
இரத்தங்கள் இன்னும் பூமியில் காயவில்லை
எம்மீது வீசப்படும் பாறைகளும் ஏற்போம்
உளியாக நின்று சிற்பங்கள் வடிப்போம்
தோல்விகளை எல்லாம் புன்னகையுடன் ஏற்போம்
வேள்விகள் செய்வோம் இதயத்தை வைரமாக்குவோம்
சுடு தீயில் பாதங்கள் புதைத்தேனும்
கடுகதியில் சுதந்திர பூமியை தேடி நிற்போம்
கறுவிழிகளில் சிவப்பு தீபங்கள் ஏந்தியேனும்
இருள்தேசங்கள் ஒளிபெற ஒற்றுமைகள் காண்போம்
சரித்திரங்கள் சமைக்க சத்தியத்துடன் அடியெடுப்போம்
நாளைய விடியல் நமக்காக காத்திருக்கு
அதுவரை நாமும் விழித்திருப்போம்.
திருக்கோவில்-எஸ்.கார்த்திகேசு
4 minute ago
13 minute ago
51 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
51 minute ago
54 minute ago