S. Shivany / 2020 டிசெம்பர் 02 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்காக மக்களை ஏற்றிச்சென்ற இராணுவ பஸ், கட்டுநாயக்க பிரதேசத்தின் 18 ஆம் கட்டைப் பகுதியில் வைத்து நேற்று(01) இரவு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கட்டுநாயக்கவில் இருந்து பஸ் பறப்பட்டுச் செல்கையில், எதிரில் வந்த ஜுப் வண்டி ஒன்றுடன் மோதுண்டதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
விபத்தையடுத்து, பஸ் மற்றும் ஜுப் என்பவற்றுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அதில் பயணம் செய்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பஸ் சாரதி மதுபோதையில் இருந்தமையே, விபத்துக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago