Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.ஏ.காதர்
மருதமுனை மேட்டுவட்டை சுனாமி வீட்டுத் திட்ட வீடுகளுக்கு விண்ணப்பித்தோருக்கான நேர்முகப் பரீட்சை இன்று திங்கட்கிழமை மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மருதமுனை மேட்டுவட்டை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுத் திட்ட வீடுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு எஞ்சிய வீடுகளை வழங்குவதற்கு கல்முனை பிரதேச செயலகத்தினால் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகப்பரீட்சையே இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
அம்பாறை மேலதிக மாவட்டச் செயலாளர் கே.விமலனாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நேர்முகப்பரீட்சையில் அம்பாறை மாவட்ட பிரதி காணி ஆணையாளர் தர்சிகா குணவர்த்தன,கல்முனை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.இராஜதுரை,நிர்வாக கிராம உத்தியோகத்தர் ஏ.எச்.ஏ.லாஹிர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த மேட்டுவட்டை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியுள்ள 81 வீடுகளுக்காக 378 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதேவேளை,நாளை செவ்வாய்க்கிழமையும் ஒரு தொகுதியினருக்கு நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .