2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

கொலையாளிக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 10 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிட்டிய, உரகஸ்மன்ஹந்திய, ரன்தொடுவில பிரதேசத்தில் 39 வயதுடைய ஆணொருவரைக் கடந்த 4ஆம் திகதி கூரிய ஆயுதங்களால் குத்திக்கொலை செய்த சந்தேகநபரை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எல்பிட்டிய நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர், இக்கொலையைச் செய்துவிட்டு தப்பியோடியிருந்த நிலையில் நேற்று புதன்கிழமை (09) உரகஸ்மன்ஹந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், கொலைக்கு இவர் பயன்படுத்திய ஆயுதங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.  

மேலதிக விசாரணைகளை உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X