2025 ஜூலை 23, புதன்கிழமை

காணாமல் போன முதியவரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 16 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆகில் அஹமட்)

இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்ததாகத் தெரிவிக்கப்படும் வயோதிபரொருவரின் சடலம் தலாவ நவஹங்குரங்கெத்த விகாரைக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியிலிருந்து இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
   
தலாவ நவஹங்குரங்கெத்த பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான எச்.எம்.கருணாரத்ன என்பவரது சடலமே மீட்கப்பட்டது.

கடந்த 14ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்த  இவரது சடலத்தை கண்ட பிரதேசவாசியொருவர், பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து இச்சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

தம்புத்தேகம நீதவானின் உத்தரவுக்கமைய அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டி.எல்.வைத்தியரத்ன பிரேத பரிசோதனையை நடத்தினார்.  

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .