2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சகோதரிகள் மீது துஷ்பிரயோகம் புரிந்த பூசகருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2012 மே 28 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சீ.எம். ரிஃபாத்)
சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படும் விஹாரையொன்றில்  பணியாற்றும் பூசகர் ஒருவரை  அடுத்த மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய பதில் நீதவான் எஸ்.பி.மடுகல்ல உத்தரவிட்டுள்ளார்.

இந்த சகோதரிகள் இருவரும் கண்டி பொக்காவெல பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இவர்கள் தமது குடும்பத்தில் தாய் உட்பட ஏனையவர்களுக்கு அடிக்கடி நோய்கள் மற்றும் பிரச்சினைகள் ஏற்படுவது தொடர்பாக பரிகாரம் காணும் பொருட்டு பன்விலயில் அமைந்துள்ள  விஹாரையொன்றிற்குச்   சென்றுள்ளனர்.

இவர்களின் குடும்பத்தார் மீது தெய்வகுற்றம் இருப்பதாகக்கூறி, அதற்கு தாம் பரிகாரம் செய்வதாக தெரிவித்து சகோதரிகள் இருவரையும் பூசகர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து சகோதரிகள் இருவரும் முறைபாடு செய்ததை அடுத்து, பன்வில பொலிஸார்  பூசகரை கைதுசெய்து நீதவான் முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்செய்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .