2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மௌலவி வீட்டு தங்க நகை, பணம் திருட்டு தொடர்பில் மூவர் கைது

A.P.Mathan   / 2013 மே 25 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
வாழைச்சேனை - மீராவோடையில் மௌலவியின் வீட்டில் இடம்பெற்ற தங்க நகை மற்றும் பணம்  திருட்டுச் சம்பவம் தொடர்பில் மோப்ப நாய்களின் உதவியுடன் இன்று சனிக்கிழமை மாலை மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
நேற்று மாலை மீராவோடை எல்லை வீதியைச் சேர்ந்த முஹம்மது முஹைதீன் முஹம்மது ஹாறூன் மௌலவி (வயது 40) என்பவரின் வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் அவரது வீட்டிலிருந்த 16 பவுண் (22 கரட்) தங்க நகைகளும் எழுபத்தையாயிரம் ரூபாய் பணமும் திருட்டுப் போயிருந்ததாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
 
மோப்ப நாய்கள் சகிதம் ஸ்தலத்திற்கு விரைந்த குற்றத் தடுப்புப் பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்துள்ளனர். மொத்தமாக இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
ஏற்கெனவே பிரதேசத்திலுள்ள சிறுவன் ஒருவன் வழங்கிய தகவலைத் தொடர்ந்து முதலாவது சந்தேக நபர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இந்தத் களவுடன் சம்பந்தப்பட்ட திருட்டு அணியாக இயங்கும் ஏனையவர்களையும் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.

  Comments - 0

  • man Wednesday, 29 May 2013 04:27 AM

    மௌலவி வீட்டில் இவ்வளவு தங்கம் ஏது...????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X