2025 ஜூலை 16, புதன்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 மே 25 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு  முன்பாகவிருந்து சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை (25) மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து,  குறித்த இடத்திலிருந்து சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விரிவான  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.                                             


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .