2025 ஜூலை 16, புதன்கிழமை

கத்திக்குத்தில் மனைவி காயம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

கல்பிட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வன்னி முந்தல் பகுதியில் கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியதால் கத்திக்குத்துக்கு உள்ளான மனைவி வைத்தியசாலையில் புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடனடியாக  கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்,  பின்னர் அங்கிருந்து புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

கத்திக்குத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் கணவர்  கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .