2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்பலி: இருவருக்குக்காயம்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறந்தநாள் வைபவ வீட்டில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியத்தில், கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில், களுபோவில வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம், சனிக்கிழமை (27), இரவு 8.30 மணியளவில் மஹரகம, நிலம்மஹர பகுதியில் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர், போகுன்தர பகுதியைச் சேர்ந்த ப்ரன்ஸிஸ் ஹேவாஹே மதுஷா தேஷரங்க எனப் பொலிஸார் தெரிவித்தனர். 

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை மஹரகம பொலிஸார் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X