2025 ஜூன் 30, திங்கட்கிழமை

திரும்பி வராத வீரர்களுக்கு பதிலாக தற்காலிக வீரர்கள்

R.Tharaniya   / 2025 மே 15 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம்  திகதி பாதியில் நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் வரும் 17-ம்  திகதி மீண்டும் தொடங்கும் என பிசிசிஐ கடந்த 12-ம்  திகதி அறிவித்தது. 

திருத்தியமைக்கப்பட்ட ஐபிஎல் அட்டவணையின்படி லீக் ஆட்டங்கள் வரும் 29-ம்  திகதி வரை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து பிளே ஆஃப் சுற்று 29, 30 மற்றும் ஜூன் 1-ம்  திகதியும் இறுதிப் போட்டி 3-ம்  திகதியும் நடைபெறுகின்றன.

இதனால் வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ள எட்டு வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் சபைகள் திருப்பி அனுப்ப நடடிவக்கை எடுக்கும்படி ஐபிஎல் அணிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் திருத்தி அமைக்கப்பட்ட ஐபிஎல் அட்டவணையானது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கி உள்ளது.

தென்னாப்பிரிக்காவின் தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் கூறும்போது, “ஐபிஎல்-பிசிசிஐ உடனான எங்கள் ஆரம்ப ஒப்பந்தம், இறுதிப் போட்டி 25-ம்  திகதி நடைபெறும், எங்கள் வீரர்கள் 26-ம்  திகதி தாயகம் திரும்புவார்கள் என்பதுதான்.

ஏனெனில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக 30-ம்  திகதி நாங்கள் புறப்படுவதற்கு முன்பு வீரர்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். தற்போதைய நிலையில், நாங்கள் இதில் பின்வாங்கவில்லை. எங்கள் வீரர்கள் 26-ம்  திகதி திரும்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X