George / 2016 ஜூலை 30 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

இது நம்ம ஆளு திரைப்படத்துக்குப் பிறகு கெளதம் மேனனின் ‛அச்சமென்பது மடமையடா' திரைப்படத்தில் நடித்தார் சிம்பு.
தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கதாநாயகிகளில் ஒருவராக ஸ்ரேயா சரண் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்டகாட்சிகள் திண்டுக்கல்லில் அண்மையில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகாவும் இத்திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கசிய ஆரம்பித்துள்ளது.
இந்த தகவலை அறிந்த ஹன்சிகா பதறிவிட்டாராம். இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்து 'இது வதந்தி... உண்மையில்லை!' என ட்வீட் செய்துள்ளார் ஹன்சிகா.
அண்மையில் இது நம்ம ஆளு திரைப்படத்தில் தன் முன்னாள் காதலி நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் சிம்பு.
அதன் தொடர்ச்சியாக தனது இன்னொரு காதலியாக இருந்த ஹன்சிகாவையும் இத்திரைப்படத்தில் நடிக்க வைக்கலாம் என்று எண்ணியிருந்தார். ஆனால் அதற்குள்ளாகவே ஹன்சிகா தடலாடியாக நடிக்கவில்லை என்று கூறிவிட்டார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago