George / 2017 மே 30 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளையதளபதி விஜய் நடித்த “தமிழன்” திரைப்படத்தில் அறிமுகமாகி, பின்னர் பொலிவுட், ஹொலிவுட் என பிரபலம் அடைந்த நடிகை பிரியங்கா சோப்ரா, இந்திய பிரதமர் மோடியை இன்று காலை சந்தித்துள்ளார்.
ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், இந்திய பிரதமரை பெர்லின் நகரில் மரியாதை நிமித்தமாக பிரியங்கா சோப்ரா சந்தித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றுப்பயணத்திலும் தனக்காக நேரம் ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி கூறிய அவர், தற்செயலாக நடந்த இந்த சந்திப்பு தன்னை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தியதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ரா, “பே வாட்ச்” திரைப்படத்தை ப்ரமோஷன் செய்வதற்காக ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago