2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

விஜய், சங்கீதா விவாகரத்து: ரூ. 225 கோடி கொடுத்து சமரச பேச்சு முடிந்தது?

Editorial   / 2026 மார்ச் 08 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


விஜய், சங்கீதா விவாகரத்து வழக்கில் புது திருப்பமாக நீதிமன்றத்திற்கு வெளியே பேசி ரூ. 225 கோடி கொடுத்து எல்லாம் முடிவாகிவிட்டதாக பேச்சு கிளம்பியிருக்கிறது. சங்கீதாவுக்கு ரூ. 225 கோடி எல்லாம் குறைவு என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.
 
விஜய்யிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று கூறி கடந்த டிசம்பர் மாதம் குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சங்கீதா சொர்ணலிங்கம். அந்த வழக்கு ஏப்ரல் 20ம் திகதி விசாரணைக்கு வருகிறது என்று கூறப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத்திற்கு வெளியே பேசி முடிவு செய்து கொள்ளலாம். அதனால் விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுமாறு சங்கீதாவிடம் கேட்டிருக்கிறார் விஜய் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் சமரச பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைத்துவிட்டதாகவும், சங்கீதா, பிள்ளைகளுக்கு சேர்த்து ரூ. 225 கோடி கொடுக்க விஜய் சம்மதித்திருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து விவாகரத்து கோரி தான் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுவிட்டாராம் சங்கீதா. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே விஜய், சங்கீதா மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ரசிகர் ஒருவர் வேளாங்கண்ணி தேவாலயத்தில் பிரார்த்தனை செய்திருக்கிறார். விஜய், சங்கீதாவின் புகைப்படத்துடன் அவர் முட்டியிட்டு நடந்து சென்று வேண்டியதை பார்த்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

முன்னதாக தஞ்சையில் நடந்த தவெக கூட்டத்திற்கு வந்த விஜய் கட்சி நிர்வாகியும் தளபதி, சங்கீதாவின் புகைப்படத்துடன் வந்தார். கூட்டம் நடந்த இடத்தில் அவர் அந்த புகைப்படத்தை உயர்த்திப் பிடிக்கவே அதை பலரும் வீடியோ எடுத்தார்கள்.

விஜய் மீது சங்கீதா வைத்த புகாரால் தான் அந்த விவாகரத்து வழக்கு மீது மக்களின் கவனம் திரும்பியது. ஃபேமிலி மேன் என்று பெயர் எடுத்த விஜய்க்கு ஒரு நடிகையுடன் திருமணத்தை தாண்டிய உறவு இருப்பதாக புகார் தெரிவித்தார் சங்கீதா. 2021ம் ஆண்டில் அந்த உறவு குறித்து கண்டுபிடித்து கேள்வி கேட்டதற்கு, முதலில் விட்டுவிடுகிறேன் என்று கூறினார் விஜய். பின்னர் குற்ற உணர்வே இல்லாமல் நடிகையுடனான தொடர்பை தொடர்ந்தார்.

நடிகையும், விஜய்யும் சேர்ந்து பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றார்கள். அப்பொழுது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அந்த நடிகை வெளியிட்டதால் எனக்கும், என் பிள்ளைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. விஜய் தன்னை முற்றிலும் ஒதுக்கி வைத்துவிட்டதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார் சங்கீதா. இருப்பினும் விஜய்யுடன் இருக்கும் நடிகையின் பெயரை அவர் தெரிவிக்கவில்லை.

விஜய்யை பிரிந்த சங்கீதா லண்டனில் இருக்கும் தங்களின் குடும்ப பிசினஸை கவனிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறாராம். சங்கீதா ரூ. 400 கோடிக்கும் அதிகமான சொத்துக்கு சொந்தக்காரராக இருக்கிறார். லண்டனில் படித்த அவர், விஜய்யின் பூவே உனக்காக படம் பார்த்து தளபதியை பிடித்துப் போய் நேரில் பார்க்கும் ஆசையில் சென்னை வந்தார்.

விஜய்யை மட்டும் அல்ல அவரின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபாவையும் சந்தித்து பேசினார். சங்கீதாவை பிடித்துப் போகவே இவர் தான் நம் வீட்டு மருமகளாக வேண்டும் என்று முடிவு செய்து சங்கீதாவை கல்யாணம் செய்து கொள்கிறாயா என விஜய்யிடம் கேட்டிருக்கிறார் எஸ்.ஏ. சந்திரசேகர். விஜய்யும் சம்மதம் தெரிவிக்கவே லண்டன் சென்று சங்கீதா குடும்பத்தை சந்தித்து நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்து பின்னர் திருமணம் நடந்திருக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .