2025 மே 16, வெள்ளிக்கிழமை

காத்திருக்கும் சமந்தா

George   / 2016 ஜனவரி 04 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்கமகனைத் தொடர்ந்து வட சென்னை திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றார் நடிகை சமந்தா.
சமந்தா, 24, தெறி, பிரமோற்சவம், பெங்களூர் நாட்கள் ஆகியத் திரைப் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனுஷ் நடிக்கும் வடசென்னை திரைப்பட வாய்ப்பு அவருக்கு கிடைத்ததால் சந்தோசமடைந்த சமந்தாவிடம், அவருக்கான கேரக்டரைப்பற்றி வெற்றிமாறன் சொன்னபோது அந்த கதாபாத்திரத்தில் ஒன்றி விட்டாராம். 

அந்த அளவுக்கு வடசென்னை பெண்ணாக அவர் நடிக்கும் கேரக்டரை உயிரோட்டமாக உருவாக்கியிருக்கிறாராம் வெற்றிமாறன். அதனால், எனது சினமா வாழ்க்கையில் வடசென்னையும் முக்கியமானதாக இருக்கும் என்று கூறி வரும்

சமந்தா, அந்தத் திரைப்படத்தில் வடசென்னை பெண்ணாக தன்னை முழுசாக மாற்றி நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாராம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .