George / 2016 மார்ச் 22 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

'பொலிவூட்டில் அறிமுகமாவது என்பது சாதாரண விடயம் அல்ல, சவாலானது. எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வேன்' என ஐஸ்வர்யா ராஜேஷ்
அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திருடன் பொலிஸ், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்களில் நடித்ததுடன் காக்கா முட்டை திரைப்படத்தில் குப்பத்து பெண்ணாக, இரண்டு குழந்தைகளுக்காக தாயாக நடித்து புகழ்பெற்றார்.
காக்கா முட்டை அவரை தமிழ் சினிமாவில் இப்போது பிஸியான நடிகையாக்கிவிட்டது. கைவசம் ஐந்தாறு திரைப்படங்களை வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்ததாக பொலிவூட் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
டாடி என்ற பொலிவூட் திரைப்படத்தில்; அர்ஜூன் ராம்பால ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். காக்கா முட்டை திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை பார்த்து வியந்து போய் தான் இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார் அர்ஜூன் ராம்பால்.
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago