George / 2016 மார்ச் 15 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆரம்பம் திரைப்படத்தில் ஆர்யாவுடன் ஸ்டைலிஷ் தமிழச்சி என்று ஆடிப்பாடி இரசிகர்களின் மனதைக் கவர்ந்து, ஆரம்பம் திரைப்படத்துக்குப் பின் காணாமல் போன அக்ஷரா, தற்போது ஜெயம் ரவியின் போகன் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகின்றார்.
கன்னடத்தைச் சேரந்த அக்ஷரா, சினேகன் ஹீரோவாக நடித்த உயர்திரு 420 திரைப்படத்தில் அறிமுகமானதுடன் தொடர்ந்து துப்பாக்கி, ஆரம்பம் மற்றும் இரும்புக்குதிரை போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் இருந்த கொஞ்ச நாட்களாக காணாமல் போயிருந்த அக்ஷரா, தற்போது ஜெயம் ரவியின் போகன் திரைப்படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடிக்கின்றார்.
'முதன்முறையாக பொலிஸ் வேடத்தில் நடிக்கிறேன். எனக்கு சண்டைக் காட்சிகளும் உள்ளன. அதுகுறித்து நினைத்தாலே சிலிர்ப்பாக இருக்கிறது. ஹொலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜுலி போல எக்ஷன் காட்சிகளில் அசத்தும் வாய்ப்பு போகன் மூலம் எனக்குக் கிடைத்துள்ளது' என்கிறார் அக்ஷரா.

20 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
45 minute ago