Freelancer / 2022 ஜூன் 20 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
( காரைதீவு நிருபர் சகா)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் கதிர்காம பாதயாத்திரை குழுவினர் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து, திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, நேற்று மாலை கொக்கிளாயில் இருந்து இயந்திரப் படகுகள் மூலம் அவர்கள் புல்மோட்டை வந்திருந்தனர்.

மேலும், கடந்த 4 ஆம் திகதி யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த இந்த யாத்திரை நேற்று 13 ஆவது தினமாக சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
கதிர்காம யாத்திரை பேரவையின் தலைவர் எஸ் .ஜெகராஜா தலைமையில், எண்பத்தி ஏழு அடியார்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள் .

நேற்றைய தினம் கொக்குளாய் முருகன் ஆலய நிர்வாகத்தினர் எரிபொருள் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அந்த இயந்திர படகுகளை கடற்படை உதவியோடு ஏற்படுத்திக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
25 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
21 Dec 2025