Editorial / 2022 ஏப்ரல் 23 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் அமைதியும், சுபீட்சமும் நிலவவேண்டி நாளை (24) ஞாயிறு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 9 மணி நேரம் தொடர்ந்து சங்கீர்த்தன பிரார்த்தனையொன்றை நடத்துவதற்கு கொழும்பு, கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணர் ஆலயத்தில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எமது நாட்டிலும், உலகின் பல நாடுகளிலும் நிலவும் இன்றைய அசாதாரண சூழ்நிலைகளையும் மக்கள் எதிர் நோக்கும் இன்னல்களையும் அனைவரும் அறிவோம். இதன் தீர்வுக்கான ஒரே வழி பகவானைப் பிரார்த்தனை செய்து அவரின் அருட்கடாட்சத்தைப் பெறுவதேயாகும்.
எனவே , கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணர் ஆலயத்தில் இந்த விசேட சங்கீர்த்தன பிரார்த்தனையை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தாங்களும் எல்லோரதும் நலன் வேண்டி இந்த சங்கீர்த்தனப் பிரார்த்தனையில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
6 minute ago
48 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
48 minute ago
48 minute ago
2 hours ago