Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா
கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலின் வருடாந்த கொடியேற்ற விழா நேற்று மாலை நடைபெற்றது.
கல்முனைக்குடி முஹைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் கொடியேற்ற வைபவம் இடம்பெற்றது.
வருடம் தோறும் ஜமாதுல் ஆகிர் பிறை ஒன்று முதல் பிறை பனிரெண்டு வரை இக் கொடியேற்ற விழா நடைபெறும்
12 நாட்கள் இடம்பெறும் இவ் விழாவில் பக்கீர் ஜமாத்தினரின் ராத்திபுக்கள்,உலமாக்கள் மார்க்க அறிஞ்சர்கள் ஆகியோரின் சொற்பொழிவுகள் இடம்பெற உள்ளன.
கொடி இறக்கும் தினமாகிய எதிர்வரும் 11ம் திகதி சனிக்கிழமை லுஹர் தொழுகையை தொடர்ந்து மாபெரும் கந்தூரி வழங்கப்பட்டு நிறைவடைய உள்ளது.

9 minute ago
30 minute ago
30 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
30 minute ago
30 minute ago
40 minute ago