Kogilavani / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனத்தினால், கொழும்பு 07, பாண்ஸ் பிளேஸ், இல.22இல் அமைந்துள்ள 'சாயி மந்திர்' இலும், கொழும்பு 06, வெள்ளவத்தை உருத்திரா மாவத்தை இல. 23ல் அமைந்துள்ள சிவானந்தா நிலையத்திலும், இன்று (23) பிற்பகல் 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 5.30 மணி வரை, மகா சிவராத்திரி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
சிவனுக்குரிய நாம ஜெபம், பஜனைப் பாடல்களுடன் இரவு முழுவதும் நடைபெறுவதுடன், சிவானந்த நிலையத்தில் 04 சாமத்துக்கும் சிவலிங்க அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும்.
லிங்கோற்பவ முகூர்த்தத்தில், பக்தர்கள் தங்கள் திருக் கரங்களினாலேயே வில்ல அர்ச்சனை செய்வதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக, சாயி சேவா நிலைய உபதலைவர். சகோ. த. யோகராஜா தெரிவித்தார்.
நிகழ்வுகள் நடைபெறும் இரு நிலையங்களிலும், சிவராத்திரியின் மகிமை பற்றி சின்மயா மிஷன் சுவாமிகள் தர்ஷன் சைத்தன்யவின் சிறப்புச் சொற்பொழிவுகளும் இடம்பெறும்.
36 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago