2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 06

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 06 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

362: அந்தியோக்கியாவின் "அப்பலோ" ஆலயம் தீப்பற்றி எரிந்தது.

794: கன்மு பேரரசர் ஜப்பானிய தலைநகரை எய்யன்கியோவுக்கு (தற்போது கியோட்டோ) மாற்றினார்.

1383: போர்த்துக்கல் மன்னன் முதலாம் பேர்டினண்ட்டின் இறப்பின் பின்னர், ஆண் வாரிசு அற்ற நிலையில் நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1633: மிங் வம்சம் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியுடன் சீனாவின் தெற்கு பூஜியன் கடலில் போரில் ஈடுபட்டு மெரும் வெற்றி பெற்றது.

1692: மந்திரம் செய்ததற்காக ஐக்கிய அமெரிக்காவில் வழங்கப்பட்ட கடைசி மரண தண்டனை.

1707: நான்கு பிரித்தானிய கடற்படைக் கப்பல்கள் சிலி தீவுகளில் மூழ்கியதில் ஆயிரக்கணக்கான மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

1784: இரசியா அலாஸ்காவின் கோடியாக் தீவில் குடியேற்றமொன்றை அமைத்தது.

1797: பதிவுச் செய்யப்பட்ட முதலாவது பரசூட் பாய்ச்சல் அன்ட்ரே ஜக்கியுஸ் கர்னெரின் என்பவரால் பாரிஸ் நகருக்கு 3200 அடி மேலாக நிகழ்த்தப்பட்டது.

1844: பாரிய எதிர்பார்ப்பு - வில்லியம் மில்லரின் படிப்பினைகளைக் பின்பற்றிய மில்லரிய கிறிஸ்தவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகையும் உலக முடிவையும் எதிர்பார்த்திருந்தனர்.

1866: பிரேசில், ஆர்ஜென்டீனா, உருகுவேக்கு எதிராக பராகுவே போரில் ஈடுபட்டது.

1875: ஆர்ஜென்டீனாவுக்கான முதலாவது தொலைத்தொடர்பு இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.

1877: ஸ்கொட்லாந்தில் பிளான்டையர் சுரங்க விபத்து, 207 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர்.

1878: செயற்கை ஒளிக்கு கீழ் நடைப்பெற்ற முதலாவது றக்பி போட்டி, இங்கிலாந்தின் சால்போட் நகரில் நடைப்பெற்றது.

1924: பன்னாட்டு டோஸ்ட்மாஸ்டர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1943: இரண்டாம் உலகப் போர் - ஜெர்மனியின் காசெல் நகரம் மீது பிரித்தானிய விமானப்படை குண்டுவீச்சு நடத்தியதில் 10,000 பேர் கொல்லப்பட்டு 150,000 பேர் வீடுகளை இழந்தனர்.

1944: இரண்டாம் உலகப் போர் - ஜெர்மனியின் ஆச்சென் நகரம் நட்பு நாடுகளிடம் வீழ்ந்தது. நட்பு நாடுகளிடம் வீழ்ந்த முதலாவது ஜெர்மன் நகாரம் இதுவாகும்.

1946: அல்பேனியாவின் கரைக்கு அப்பால் பிரித்தானிய போர்க் கப்பல் கண்ணிவெடியில் சிக்கியதால் 40 பிரித்தானிய கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

1949: சோவியத் ஒன்றியம் அதன் முதலாவது அணுகுண்டை வெடிக்கச் செய்தது.

1953:லாவோஸ், பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1956: பாகிஸ்தான், கராச்சியில் கான்கிரீட் கூரைப் பாகம் வீழ்ந்ததில் 48பேர் பலி.

1957: வியட்நாம் போர் - ஐக்கிய அமெரிக்காவின் முதல் போர்ச் சாவு.

1960: மாலி, பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1964: பல்கட்சிக் குழு, கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவுச் செய்தது.

1964ட: சான்-போல் சார்ட்ரேக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்காப்பட்டது, எனினும் அவர் அதனைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.

1965: இந்தியா-பாகிஸ்தான் இடையான இரண்டாம் காஷ்மீர் போர் முடிவுக்கு வந்தது.

1968: நாசாவின் அப்பல்லோ 7 விண்கலம் பூமியை 163 தடவைகள் சுற்றிய பின்னர் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.

1970: துங்கு அப்துல் ரகுமான் மலேசியாவின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

1987: யாழ்ப்பாணம் அராலித் துறையில் இந்திய அமைதிப் படையின் உலங்குவானூர்தி தாக்கியதில் பல பயணிகள் கொல்லப்பட்டனர்.

2001 - PSLV C-மூன்று விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

2007: எல்லாளன் நடவடிக்கை - இலங்கையின் அநுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் கரும்புலிகள் 21பேரும், இலங்கை படையினர் 14பேரும் கொல்லப்பட்டு பல வானூர்திகள் அழிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .