Editorial / 2018 ஓகஸ்ட் 28 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1914 : ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலஸ் பேரரசர் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரின் பெயரை, பெத்ரோகிராது என மாற்றினார்.
1917 : கிரேக்கத்தில் தெசலோனிக்கி என்னும் நகரில் இடம்பெற்ற தீ விபத்தில், நகரின் பெரும் பகுதி அழிந்தது. 70,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1920 : பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் கொண்டு வரப்பட்டது.
1928 : சென்னை மியூசிக் அகடமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.
1938 : அமெரிக்காவின் நியூயார்க்கையும் கனடாவின் ஒன்றாரியோவையும் இணைக்கும், சென் லாரன்ஸ் ஆற்றின் மேலாக, ஆயிரம் தீவுகள் பாலம் அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டினால் திறந்து வைக்கப்பட்டது.
1940 : இரண்டாம் உலகப் போர் - பிரிட்டன் சண்டையின் ஒரு பகுதியாக பெரும் வான் தாக்குதல்கள் இடம்பெற்றன.
1945 : சுகர்ணோ இந்தோனேசியாவின் முதலாவது அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.
1950 : பெல்ஜியம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் யூலியன் லாகூட் வலதுசாரிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
1958 : விளாதிமிர் நபோக்கொவின் சர்ச்சைக்குரிய லொலிதா என்ற புதினம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
1965 : வியட்நாம் போர் – ஆத்திரேலியா, நியூசிலாந்து ஆகியன தமது படைகளை வியட்நாமில் இருந்து திரும்ப அழைக்க முடிவு செய்தன.
1977 : ஸ்டீவ் பைக்கோ தென்னாப்பிரிக்கக் பொலிஸாரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் படுகாயங்களால் இறந்தமை, தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைகள் வெளிகொணரப்பட்டன.
1983 : அமெரிக்காவில் டெக்சஸ் கரையில் அலீசியா சூறாவளி தாக்கியதில், 21 பேர் உயிரிழந்தனர்.
2008 : பாக்கிஸ்தானில் அரசுத்தலைவர் பெர்வேஸ் முஷாரஃப் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதை அடுத்து, அவர் பதவியைத் துறந்தார்.
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago