2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று : மார்ச் 27

Ilango Bharathy   / 2023 மார்ச் 27 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

1915 : குடற்காய்ச்சல் நோய்க்கிருமிகள் தொற்றிய டைஃபாய்டு மேரி என்பவர் அமெரிக்காவில் தனிமைப்படுத்தப்பட்டார். இவர் தனது வாழ்நாள் முழுவதையும் தனிமையில் கழித்தார்.

1941 : இரண்டாம் உலகப் போர் - யுகோஸ்லாவியாவில் அச்சு அணி ஆதரவு அரசாங்கம் யுகோஸ்லாவிய வான்படையினரால் கவிழ்க்கப்பட்டது.

1943 : இரண்டாம் உலகப் போர் - அலூசியன் தீவுகளில் அமெரிக்கக் கடற்படைக்கும் ஜப்பானுக்கும் இடையே சமர் ஆரம்பமானது.

1958 : நிக்கிட்டா குருஷேவ் சோவியத் தலைமை அமைச்சரானார்.

1964 : வட அமெரிக்காவின் வரலாற்றில் அதி ஆற்றல் வாய்ந்த 9.2 ரிக்டர் நிலநடுக்கம் அலாஸ்காவில் இடம்பெற்றதில், 125 பேர் உயிரிழந்தனர். ஏங்கரெஜ் நகரத்தின் பெரும் பகுதி சேதமுற்றது.

1968 : விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் வானூர்தி விபத்தொன்றில் உயிரிழந்தார்.

1969 : நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

1970 : கொன்கோர்ட் விமானம் தனது முதலாவது சுப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது.

1977 : அமெரிக்காவின் இரண்டு போயிங் 747 பயணிகள் விமானங்கள் கேனரி தீவுகளில் மோதிக் கொண்டதில், 583 பயணிகள் உயிரிழந்தனர். 61 பேர் மீட்கப்பட்டனர்.

1980 : நோர்வேயின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஒன்று வட கடலில் விபத்துக்குள்ளாகியதில், 123 பேர் உயிரிழந்தனர்.

1981 : போலந்தில் சொலிடாரிட்டி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 12 மில்லியன் தொழிலாளர்கள் 4 மணி நேர பணி நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

1986 : ஆவுஸ்திரேலியா, மெல்பேர்ண் நகரில் காவல்துறை தலைமையகத்தின் முன்னால், வாகனக் குண்டு வெடித்ததில் ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டுஇ 21 பேர் காயமடைந்தனர்.

1990 : அமெரிக்கா கியூபாக்கு காஸ்ட்ரோவுக்கு எதிரான வானொலி பிரசார சேவையை ஆரம்பித்தது.

1993 : யான் சமீன் சீனாவின் அரசுத்தலைவரானார்.

1998 : அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆண்களின் விறைக்க முடியாமைக்கான சிகிச்சைக்காக வயாகராவை அனுமதித்தது.

1999 : அமெரிக்க லொக்கீட் எப்-117 நைட்கோக் விமானத்தை யுகோஸ்லாவியா சாம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியது.

2002 : இஸ்ரேல், நத்தானியாவில் பாலஸ்தீனர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 29 பேர் கொல்லப்பட்டனர்.

2002 : பிரான்ஸ், நான்டேர் நகரில் நடைபெற்ற நகரசபை கூட்டம் ஒன்றை நோக்கி துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதில், எட்டு நகரசபி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். 19 பேர் காயமடைந்தனர்.

2009 :  இந்தோனேசியாவில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 99 பேர் உயிரிழந்தனர்.

2014 : பிலிப்பீன்ஸ் அரசு மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணிப் போராளிகளுடன் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்தியது.

2016 : லாகூர், குல்சன்-இ-இக்பால் பூங்காவில் உயிர்ப்பு ஞாயிறு கொண்டாட்டத்தின் போது, தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 70 பேர் கொல்லப்பட்டு, 300 பேர் காயமடைந்தனர்.


 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X