2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பிரதேச சபை தவிசாளரின் சகோதரர் மீது தாக்குதல்; பிரதான சந்தேகநபர் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில்

Super User   / 2012 ஜூன் 12 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரின் சகோதரர் மீது கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பிலான பிரதான சந்தேகநபரை எதிர்வரும் ஜுன் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

கடந்த மாதம் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்த பிரதேச சபை தவிசாளரின் சகோதரன் மீது ஆட்டோவில் வந்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்திற்கு பயன்படுத்திய ஆட்டோ ஒன்றை சம்பவ தினம்  விசேட பொலிஸ் குழுவால் மீட்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இருவரை பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் பிரதான சந்தேகநபரான முகமட் சியாம் தலைமறைவாகி வந்துள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்

கைது செய்யப்பட்டவரை நேற்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் ஆயர்படுத்திய போதே ஜுன் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0

  • slm.risvi Wednesday, 20 June 2012 10:37 PM

    குறித்த சந்தேக நபர் எப்போது விடுதலை செய்யப்படுவார்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .