2025 ஜூன் 25, புதன்கிழமை

பெரியகுளத்தின் தற்காலிக அணைக்கட்டு உடைந்ததால் அன்னமலை கிராமத்துக்குள் வெள்ளம்: 40 குடும்பங்கள் வெளி

Menaka Mookandi   / 2012 ஜனவரி 07 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

நாவிதன்வெளி பிரதேசத்தின் அன்னமலைக் கிராமத்தில் அமைந்துள்ள பெரியகுளத்தின் மதகுகளின் திருத்தப் பணிக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அணைக்கட்டு இன்று உடைந்ததில் அன்னமலைக் கிராமத்துக்குள் நீர் உட்புக ஆரம்பித்துள்ளது. இதனால் அக்கிராமத்தைச் சேர்ந்த சுமார் 40 குடும்பங்கள் இன்று அதிகாலை வீடுகளை விட்டு வெளியேறின.

அன்னமலை பெரியகுள வாய்க்கால் மதகுகளின் திருத்தப் பணிக்காக சுமார் ஒரு வாரத்திற்கு முதல் நீர் வழங்கல் திணைக்கள அம்பாறை காரியாலயத்தினால் தற்காலிக அணைக்கட்டு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

ஆயினும் இங்கினியாக்கள நீர்த்தேக்கத்திலிருந்தும்,  நேற்றும் அதன் முன்தினமும் பெய்த மழை நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாகவும், தற்காலிக அனைக்கட்டு உடைந்து குடியிருப்புக்களில் நீர்புகுந்ததன் காரணமாக அப்பிரதேசத்தில் வாழ்ந்த சுமார் 40 குடும்பங்கள் இன்று அதிகாலை இடம்பெயர்ந்து சென்றுள்ளன.

இதேவேளை இன்று காலை அவ்விடத்திற்கு வருகை தந்த நீர் வழங்கள் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் மீண்டும் தற்காலிக அனைக்கட்டை அமைத்து சீர்செய்துள்ளனர்.

ஒருவாரத்திற்கு முன் ஆரம்பித்த இந்த திருத்தப்பணி பொறுத்தமற்ற காலப்பகுதியில் இடம்பெற்றதனாலேயே ள் இந்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்ததாகவும் தற்போது 5 குடும்பங்களின் வீடுகள் முழுமையாக இதனால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அன்னமலை ஸ்ரீ சக்தி வித்தியாலயம் முழமையாக நீரில் மூழ்கியுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .