2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

மின்மானியில் குளறுபடி செய்து மின்சாரம் பெற்று வந்த 15பேர் கைது

Kogilavani   / 2011 செப்டெம்பர் 20 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக மின்மானியில் குளறுபடி செய்த 15 பேரை நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

இலங்கை மின்சார சபையின் தலைமையக விசேட புலனாய்வுப் பிரிவினர் பொலிசாருடன் இணைந்து ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது மேற்படி 15 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற மற்றும் மின்மானியில் குளறுபடிசெய்த 22 பேரை மின்சார சபையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெஸ்ரிரா முன்னிலையில் ஆஜயர்படுத்திய போது இவர்களை 30 ஆயிரம் ரூபா முதல் 2 இலட்சத்து 1 ஆயிரம் ரூபா வரையில் சரீர பிணையில் விடுவித்து எதிர்வரும் 21ம் திகதி புதன்கிழமை
நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 11

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8