Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 மே 29 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் மூன்றாண்டு காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென நெல்சிப் திட்டத்தின் கீழ் 9.9 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர் தெரிவித்தார்.
இதற்கிணங்க அட்டாளைச்சேனை சந்தைக் கட்டிட நிர்மாண நடவடிக்கைகளுக்கான முதற்கட்ட நிதியாக 80 இலட்சம் ரூபாவும், பாதை புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக 60 இலட்சம் ரூபாவும் தற்போது நெல்சிப் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மேற்படி திட்டத்தின் கீழ், ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகச் சுற்றுப்புற வீதிகள் புனரமைக்கப்படவுள்ளதோடு, ஒலுவில் - பாலமுனை பிரதேசங்களுக்குத் தேவையான வடிகான்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தவிசாளர் நசீர் கூறினார்.
இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தெருவிளக்குகள் பொருத்தும் நடவடிக்கையினை தாம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
58 minute ago
1 hours ago