2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 19, 20 ஆம் திகதிகளில்

Super User   / 2012 மே 10 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜே.எம்.ஹனீபா, எஸ்.எம்.எம்.றம்ஸான், அப்துல் அஸீஸ்)


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 7வது பட்டமளிப்பு விழா முதல்தடவையாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் எதிர்வரும் 19, 20 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இப்பட்டமளிப்பு விழா தொடர்பான ஊடக மாநாடு இன்று மாலை உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் ஒலுவில் பல்கலை கழகத்தில் நடைபெற்றது.

இங்கு உபவேந்தர் இஸ்மாயில் உரையாற்றுகையில், 'இப்பட்டமளிப்பு விழா இரண்டு தினங்களுக்கு நடைபெறவுள்ளது அதாவது 19ம் திகதி உள்வாரிமாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது இன்றைய தினம் 424 மாவர்கள் பட்டம் பெறவுள்ளனர்.

இவர்களில் பிரயோக விஞ்ஞான பிரிவில் 58 பேரும், கலை கலாச்சார பிரிவில் 237 பேரும், இஸ்லாமிய கற்கை பிரிவில் 70 பேரும், வர்த்தக முகாமைத்துவ பிரிவிலிருந்து 59 பேரும் பட்டம் பெறவுள்ளனர் முதலாம் நாள் நிகழ்வின் பிரதம அதிதியாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கலந்து கொள்ளவுள்ளார் சிறப்புப் பேச்சாளராக கல்விஅமைச்சின் செயலாளர் கலாநிதி சுணில் ஜயந்த நவரத்ன கலந்து கொள்வார்' எனக் கூறினார்.

20ஆம் திகதி வெளிவாரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. அன்றைய தினம் பொதுக்கலைப் பிரிவில் 123 பேரும், வர்த்தகமுகாமைத்துவப் பிரிவில் (பிபிஏ) 21 பேரும், வர்த்தகப்பிரிவில் (பிகொம்) 02 பேரும் பட்டத்தை பெறவுள்ளனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி உயர் கல்வி அமைச்சர் நந்தமித்தர ஏக்கநாயக்க கலந்து கொள்ளவுள்ளார் சிறப்பு பேச்சாளராக நெதர்லாந்தை சேர்ந்த கிளிஞ்சன்டெல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோர்ஜ் பிரஜ் கலந்து கொள்ளவுள்ளதாகவும் உபவேந்தர் இஸ்மாயீல்  தெரிவித்தார்.

அத்துடன் அன்றைய நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலை கழகத்தின் ஸ்தாபக உபவேந்தர் எம்.எல்.ஏ. காதருக்கு கௌரவ இலக்கிய கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

மேலும் 19ம் திகதி பிற்பகல் 4.30 தொடக்கம் 8.30 வரைக்கும் தென்கிழக்கு பல்கலை கழகத்தில் 2000ம் ஆண்டு தொடக்கம் 2011ம் ஆண்டு வரைக்கும் விளையாட்டுத்துறையில் அக்கரை செலுத்தியவர்கள் மற்றும் சிறந்த அடைவு மட்டங்களை பெற்றுக் கொண்டவர்களை கௌரவிக்கும் வகையில் வர்ண இரவு (கலர் நைட்) நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு 151 பேர் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.ஏ.சத்தார் உட்பாட பீடாதிபதிகள் மற்றும் சிரேஷ்ட்ட விரிவுரையாளர்கள் உட்பட பல்வேறு ஊடக நிறுவனங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 


You May Also Like

  Comments - 0

  • NM.SIRAJDEEN Saturday, 12 May 2012 05:41 AM

    very best wishes

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .