2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவர்களுக்கு 30,000 ஆயிரம் ரூபா அபராதம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 22 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

 

திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த இருவருக்கு 30 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

தம்பிலுவில் திருக்கோவில் பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த இருவரை கடந்த வாரம் திருக்கோவில் பொலிஸார் மதுபானத்துடன் கைது செய்ததுடன் பின்னர் அவர்களை பிணையில் விடுதலை செய்தனர்.

இந்நிலையில், மேற்படி நபர்களை இன்று புதன்கிழமை நீதிமன்றில் ஆஜயர்படுத்தியபோது நீதிபதி தலா 15 ஆயிரம் ரூபா வீதம் இருவரையும் 30 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .