Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 12 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம். றம்ஸான்)
கல்முனைப் பிரதேச வீதியொன்றின் பிரச்சினை தொடர்பில் சுமார் 15 நிமிடங்களுக்குள் தீர்வு காண்பதற்கான முயற்சியினை மேயர் சிராஸ் மீராசாஹிப் அண்மையில் மேற்கொண்டார்.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள காசிம் வீதியின் முகப்பில் தனியார் மருத்துவ மனையொன்று அமைந்துள்ளது.
இந்த மருத்துவமனைக்கு வருகை தருவோர் அனைவரும் மேற்படி மருத்துவமனையின் முன்னால் - வாகனங்களை நிறுத்தி வைப்பதால் வீதியின் போக்குவரத்துக்கு பாரிய இடையூறு ஏற்படுவது வழமையாகும்.
இவ்விடயம் குறித்து, மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரான வைத்தியரிடம் பலமுறை பொதுமக்கள் முறையிடப்பட்டும் உரிய தீர்வு காணப்படவில்லை.
இந்த நிலையில், இவ் வீதி விவகாரம் குறித்து பொதுமகனொருவர் கல்முனை மேயருக்கு தொலைபேசி மூலம் முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து, 15 நிமிடங்களுக்குள் குறித்த தனியார் வைத்தியசாலை அமைந்துள்ள காசிம் வீதிக்கு வருகை தந்த மேயர் - இவ்விடயம் தொடர்பில் மருத்துவமனை நிர்வாக இயக்குநரிடம் விளக்கம் கோரியுள்ளார்.
மக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் - வைத்தியசாலைக்கு வருகின்ற வாகனங்களை நிறுத்தி வைப்பதற்குரிய நிரந்தர ஏற்பாடுகளை குறுகிய காலத்துக்குள் மேற்கொள்ளுமாறு மேயர் சிராஸ் வைத்தியசாலையின் நிர்வாக இயக்குநரிற்கு உத்தரவிட்டுள்ளார்.
kulathooran Monday, 12 December 2011 10:51 PM
பாராட்டுகள் மேயேரே,இதே போன்று நமதூர் பிரதான வீதியில் அமைந்துள்ள ஜவுளி கடைகளில் முன்னாலும் இவ்வாறான நிலை உண்டு அதையும் சற்று கவனத்தில் எடுக்கவும்.
Reply : 0 0
kulathooran Monday, 12 December 2011 11:06 PM
முறைப்பாடுக்கான 15 நிமிட தீர்வு வழங்கினாலும், 10 வருடமாக பெயர் இன்றி இருக்கும் மாநகரின் தென் எல்லை கேட் வே (gate way) தங்கள் கண்ணில் படாதது வேடிக்கையாக உள்ளது,நீங்கள் மேயேராகி இரு மாதமாகியும் கேட் வே இன்னும் நிர்வாணமாக இருப்பது கல்முனை மாநகருக்கு இழுக்கு என்பதை புரிவீர்களா?
Reply : 0 0
podankan Monday, 12 December 2011 11:22 PM
புது தும்புகட்டு நன்றாக கூட்டும் தெரியும் தானே மக்களுக்கு.
Reply : 0 0
Thariq Niyas Monday, 12 December 2011 11:26 PM
முதல்வர் அவர்களே உங்களின் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர வேண்டும்.. குப்பை கூளமற்ற சுத்தமான நகராக கல்முனை மாநகரை உருவாக்க... மாநகருக்கு உள்ளே உள்ள குப்பைகளையும் அகற்றுங்கள்...
Reply : 0 0
Majeed Tuesday, 13 December 2011 01:54 AM
ரம்சான் mayor கூடவே இருக்காரோ?
Reply : 0 0
KILAKKIN OOR KURUVI Tuesday, 13 December 2011 03:55 AM
இதுபோன்று வீதியின் இரு பக்கங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். அடுத்து வீதியோர திடீர் மீன் சந்தை, வாகனத்தில் வியாபாரம் செய்வது இது குறித்தும் நடவடிக்கை எடுக்கவேண்டும் ..............
Reply : 0 0
pasha Tuesday, 13 December 2011 02:28 PM
வீதியெங்கும் மண், கல் கொட்டப்பட்டு கட்டட வேலைகள் நடக்கின்றன. இந்த விடயத்தில் மேயர் என்ன செய்யபோகின்றார்?
Reply : 0 0
uooran Tuesday, 13 December 2011 03:40 PM
பதினைத்து நிமிடத்துக்குள் பதிலளிக்கும் மேயரே!
மாவடிப்பள்ளிக்குக்கூட பெயர்ப்பலகை வைத்துள்ளார்கள் சாய்ந்தமருதுக்கு?????
மாவடிப்பள்ளிக்குக்கூட மாட்டுமடுவம் உண்டு சாய்ந்தமருதுக்கு???????????
மாவடிப்பள்ளி வீதிகளில் குப்பைகள் இல்லை சாய்ந்தமருதில் மாநகரின் தென் வரவேற்பு மையம் நிர்வாணமாக உள்ளது.
இதைவிட இன்னும் பல தேவைகள் தேங்கிக்கிடக்கின்றன இவற்றுக்கும் தீர்வைத்தாருங்கள் மேயரே ?
Reply : 0 0
சிறாஜ் Tuesday, 13 December 2011 09:00 PM
ஹி ஹி ஹி இது நானும் சொல்லியிருப்பேனே இப்படி நடவடிக்கை எடுக்கனும் என்று. இதுதான் உங்கட 15 நிமிட நடவடிக்கையா? கேட்பவன் கேணையன் என்றால் ஆமையும் பறக்குமாம்.
Reply : 0 0
KILAKKIN OOR KURUVI Thursday, 15 December 2011 01:50 AM
வாகன போக்குவரத்து போலீசார் செய்து முடிக்க வேண்டிய இந்த காரியத்தை ஏன் முதல்வரே தாங்கள் நேரடியாகச் சென்று எதிர்ப்பை தேடுகிறீர்கள். உரியவர்களுக்கு உத்தரவு போடவேண்டியதுதானே. இப்படியான விடயம்களை எதிர்காலத்தில் கவனமாக சிந்தித்து செய்வது நல்லது .
Reply : 0 0
KALAM Saturday, 17 December 2011 03:42 AM
நண்பா் மஜீட்.......
ஊடகவியளாலர் றம்ஸான் பிரதி மேயரின் செய்தியையும் அனுப்பியுள்ளாரே அப்படியென்றால் அவர் பிரதி மேயருடனும் இருக்கிறாரா? சிந்தித்து கருத்தை பரிமாருங்கள்.
Reply : 0 0
akm.jiffry Sunday, 25 December 2011 05:27 AM
கல்முனை கடற்கரை பள்ளி வளவு இருட்டா இருக்கு சுபகு தொழவாரது கடும் கஷ்டம் இருட்டா இருக்கு பல்ப் போட்டு தாங்க என்று நிர்வாக சபையால் கொடுத்த கடிதத்துக்கு 2 மாதமாக எந்த நடவடிக்கையும் இல்லை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
8 hours ago