2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 25பேர் அக்கரைப்பற்றில் கைது

Menaka Mookandi   / 2012 மே 10 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்று பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற 25பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இலங்கை மின்சார சபை அதிகாரிகளுடன் இணைந்து பொலிஸார் இன்று வியாழக்கிழமை நடத்திய சுற்றிவளைப்பின் போதே மேற்படி 25பேரும் கைது செய்யப்பட்டனர் என்று அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை மின்சார சபையின் கொழும்பு தலமையகத்தின் விசேட பிரிவும் அம்பாறை
பொலிஸாரும் இணைந்து அக்கரைப்பற்று 5ஆம் கட்டை, பனங்காடு ஆகிய பிரதேசங்களை
சுற்றிவளைத்த போது, சட்டவிரோத மின்சாரம் பெற்ற ஒரு தொகை மின்சார வயர்கள் மீட்கப்பட்;தோடு 25பேரும் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை அக்கரைப்பற்று மாவட்ட நீதவான்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் விசேட பிரிவு தெரிவித்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .