Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 08 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்திக்கு மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய திவி நெகும, கமநெகும, சமுர்த்தி ஆகிய திட்டங்களுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 316 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டடுள்ளது என தேசிய காங்கிரசின் தலைவரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான அமைச்சர் எ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்று புதன்கிழமை மாலை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான அமைச்சர் எ.எல்.எம்.அதாவுல்லா தலைமையில் நடைபெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய திவி நெகும, கமநெகும, சமுர்த்தி ஆகிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மக்களின் வாழ்வாரத்தை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
அத்துடன் கிழக்கில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு கறவைப் பசுக்கள் வளர்ப்பதற்கும் முட்டைகளின் தட்டுப்பாட்டை தவிர்க்கும் பொருட்டு கோழி வளர்ப்பதற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் எ.எல்.எம்.அதாவுல்லா அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்திக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 316 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கமநெகும திட்டத்திற்கு 190 இலட்சம் ரூபாவும் திவிநெகும திட்டத்திற்கு 64 இலட்சம் ரூபாவும், சமுர்த்தி திட்டத்திற்கு 62 இலட்சம் ரூபாவும், ஒதுக்கப்பட்டள்ளதுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 167 வீடுகளை அமைப்பதற்கு 8.15 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மாநகர மேயர் ஏ.அகமட்சக்கி, பிரதேசசபை தவிசாளர் எம்.ஏ.றாசிக் மாட்டதிட்டமிடல் பணிப்பாளர் ஏ.அன்வர்டீன், பிரதேசசெயலாளர் எம்.வை. சலீம் உட்பட மாவட்ட திணைக்களத் தலைவர்கள் உயரதிகாரிகள் கலந்த கொண்டனர்.
roomy Friday, 09 September 2011 05:10 AM
வோட்டு கேட்டு மட்டும் மற்றைய ஊருகளுக்கு வாருங்கள் ....... இருந்தும், சால்வை அரசிடம் இருந்து நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பாராட்டுக்கள்.
Reply : 0 0
rakkish. Friday, 09 September 2011 06:47 PM
பாராட்டுக்கள்.. எப்படியாவது மக்கள் குறைகளை நிவர்த்தி செய்யுங்கள்.. செய்யவும் மாட்டார்கள் செய்பவனை விடவும் மாட்டார்கள் சிலர்... கட்சிகள் மக்களுக்காக என்ற நிலை கடந்து மக்கள் கட்சிக்காக என்ற நிலையில் சில பிரதான கட்சிகளும் மக்களும் .. தனி நபராய் நின்று சாதிக்கும் உங்கள் சேவை அக்கரைப்பற்றிலாவது தொடரட்டும்..உன்னை எதிர்த்தவனில் நானும் ஒருவன்...
Reply : 0 0
IBNU ABOO Saturday, 10 September 2011 03:38 AM
கொடுத்தேதேல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்? ஒருத்தனுக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான். அமைச்சர் அதாஉல்லாவின் அருமை அவர் இல்லாத ஒரு காலத்தில் புரியும் . அப்போது அவர் பிறந்த மண்ணில் அவர் ஒருவரே மண்ணின் மைந்தன் என்பதை அவர் எதிரிகள்உட்பட யாவரும் உணர்வார்கள் .மேலும் அமைச்சரே பின்தங்கிய அனைத்து நம் சமூகத்துக்கும் உங்கள் சேவை கிடைப்பது உங்கள் பதவியின் தார்மீக கடமை என்பதை மறந்து விடாதீர்கள்.
Reply : 0 0
roomy Saturday, 10 September 2011 12:39 PM
அக்கரைபற்றுக்கும் ஏனைய ஊருகளுக்கும் வெறுப்பை உண்டாக்குவது மட்டும்தான் என்று இன்றே பலருக்கு தெரிந்தது ... இருந்தும் நாய் வாலை நிமித்த்த முடியாது........அது போல.... பின்தங்கிய சமூகத்துக்கு சேவை கிடைப்பது என்பதும் பகல் கனவே ........
Reply : 0 0
sabith Tuesday, 13 September 2011 11:32 PM
அக்கரைபற்றுக்கு மட்டுமல்ல எல்லா பிரதேச செயலகங்களுக்கும் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் சரியாக பயன்படுத்தினால் அக்கரைப்பற்று மட்டுமல்ல எல்லா ஊர்களும் பயன் அடையும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
53 minute ago
56 minute ago
58 minute ago