2025 ஜூன் 26, வியாழக்கிழமை

காட்டு யானைகளின் தாக்குதலால் 4 வீடுகள் சேதம்

Super User   / 2012 ஏப்ரல் 22 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

பொத்துவில் சங்கமன்கண்டி பிரதேசத்தின் குடியிருப்பு பகுதிக்குள்  நேற்று சனிக்கிழமை நள்ளிரவில் காட்டுயானைகள் குடிமனைகளைத் தாக்கியதில் 4 வீடுகள் சேதமடைந்தன.

அத்துடன் வீடுகளில் இருந்த நெல்மூடைகளையும் யானைகள் தூக்கி வீசியுள்ளன. குடிமனைக்குள் நித்திரையில் இருந்தவர்கள் மயிரிழையில் உயிர்தப்பினர். அருகில் இருந்த வீடுகளில் இருந்த மக்கள் பீதியினால் வீடுகளைவிட்டு வேறு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிச்சென்றனர்.

இப்பிரதேசத்தில் வரலாற்று ஆலயமான சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயத்தின் சுற்றுமதில்கள் மடங்கள் என்பவற்றை கடந்தவாரம் யானைகள் தாக்கி சேதப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யானைகளில் இருந்து குடிமனைகளை பாதுகாக்க கிராமத்தை சுற்றி பாதுகாப்பு மின்சாரவேலி அமைக்குமாறும் யானைகளினால் சேதமடைந்த வீடுகளை நிர்மானிக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நஷ்டஈடுகளை வழங்க  பிரதேசசெயலகம்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என தழிழ் தேசிய கூட்டமைப்பின் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .