2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இராணுவ ரக்வண்டி தடம்புரண்டமையால் 5 இராணுவத்தினர் காயம்

Super User   / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை, மத்திய முகாம் பிரதேச ஆற்றில் இராணுவ ரக்வண்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தடம்புரண்டு விழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் ஐந்து இராணுவத்தினர் படுகாயமடைந்த நிலையில் வீரகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய முகாம் பொலிஸார் தெரிவித்தனர்.

காரைதீவு இராணுவ முகாம்  6ஆவது கலால் படை பிரிவு இராணுவத்தினர் 20 பேர் இராணுவ ரக் வண்டியில் சம்பவ தினத்தன்று இரவு 7 மணியளவில்  மத்திய முகாம் 16ஆவது கொலனி பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்த போதே வீதியை விட்டு விலகி வீரகொட ஆற்றில் தடம்புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த இராணுவ வீரர்களில் இரண்டு பேர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய முகாம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .