2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சாய்ந்தமருது பிரதேசத்தில் 11 வீதிகளுக்கான நிர்மாண பணிகள் ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 ஜூன் 18 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)

'கமநெகும' வேலைத் திட்டத்தினூடாக சாய்ந்தமருது செயலகப் பிரிவிற்குட்பட்ட 11 வீதிகளுக்கான நிர்மாணப்பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் 'ஜெய்க்கா' நிறுவனத்தின் நிதியுதவியுடன் இவ் வீதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம.எஸ்.உதுமாலெவ்வை, அம்பாரை பிராந்திய வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம். றிஸ்வி, அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் இணைப்பாளர்களான தாவுத், ஹில்மி, பிரதேச கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான பொறுப்பாளர் எம்.எஸ்.நழீர், கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி முன்னாள் அதிபர் ஐ.எல்.எ.மஜீட் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .