2025 ஜூன் 25, புதன்கிழமை

அம்பாறை மாவட்ட 23ஆவது இளைஞர் பரிசளிப்பு விழா

Super User   / 2011 டிசெம்பர் 27 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

இளைஞர் விவகார திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 23ஆவது இளைஞர் பரிசளிப்பு விழா இன்று செவ்வாய்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் கே.எம்.திசாநாயக்கா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறப்பினர்களான பீ.எச்.பியசேன, சிறியாணி விஜேவிக்கிரம, அம்பாறை மாவட்ட செயலாளர் நீல் டி சில்வா,  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இயக்குனர் சபையின் பணிப்பாளர் எல்.ஆர்.எல்லாவள உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர்களின் கலை திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன் கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .