Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2012 மார்ச் 06 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரவில் நீண்ட காலமாக காணி உறுதிப் பத்திரம் இல்லாதிருந்த குடும்பங்களுக்கு புதிய காணிகட்டளை சட்டத்தின் கீழ் எல்.டீ.ஓ காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய் கிழமை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
காணி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.றாபி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது, சம்மாந்துறையின் பல கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 117 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், தலைமை சமுர்த்தி முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.இல்லியாஸ் உட்பட கிராம உத்தியோகத்தர்கள், காணிப்பிரிவு உத்தியோகத்தாகள் பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
26 minute ago
58 minute ago