2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கிழக்கில் 135 பாடசாலைகளில் இடை வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி

Kogilavani   / 2012 பெப்ரவரி 05 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.மாறன்)

 

கிழக்கு மாகாண கிராமப்புற மாணவர்களுக்கு இடைநிலைக் கல்வியை வழங்கும் செயற்திட்டத்தின் கீழ்   ஐந்து வருடங்களுக்குள் 135 பாடசாலைகளில் இடைநிலை வகுப்புக்கள் ஆரம்பிப்பதற்கான அனுமதியை கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு வழங்கியுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார தெரிவித்தார்.

கிழக்கில் யுத்த சூழ்நிலை நீங்கி அமைதியேற்பட்டபின் கிராமப்புற மாணவர்களின் இடைநிலைக் கல்வியை மேம்படுத்த வேண்டிய அவசியத்தேவை உணரப்பட்டதாலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தரம் 6 முதல் தரம் 9 வரையான வகுப்புக்கள் 33 பாடசாலைகளிலும் தரம் 9 தொடக்கம் தரம் 11 வரையிலான வகுப்புக்கள் 51 பாடசாலைகளிலும் க.பொ.த. உயர்தர வகுப்புக்கள் 51 பாடசாலைகளிலும் புதிதாக ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .