2025 ஜூன் 25, புதன்கிழமை

கஞ்சா வைத்திருந்த சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 14 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

சட்டவிரோதமான கஞ்சாபோதைப் பொருள் வைத்திருந்த ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆ.ஈ.அலெக்ஸ்ராஜா இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

பொத்துவில் பிரதேசத்தில் சட்டவிரோதமான மூன்று கிராம் கஞ்சா போதைபொருள் வைத்திருந்த ஒருவரை இன்று புதன்கிழமை காலை 8 மணியளவில் பொலிஸார் கைது செய்தனர்.

மேற்படி கைது செய்யப்பட்வரை  சம்பவதினமான இன்று புதன்கிழமை பொத்துவில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆ.ஈ.அலெக்ஸ்ராஜ முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இவரை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பான விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .