2025 ஜூன் 25, புதன்கிழமை

சட்டவிரோதமாக 15 மாடுகளை கடத்திய இருவர் கைது

Kogilavani   / 2011 டிசெம்பர் 07 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)
அம்பாறை, வரிப்பொத்தாஞ்சேனை பிரதேசத்தில் சட்டவிரோதமாக 15 மாடுகளை கடத்திய  இருவரை நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளதாக அம்பாறை நகர பொலிஸார் தெரிவித்தனர்.

பிபிலைப் பிரதேசத்தில் இருந்து வரிப்பொத்தாஞ்சேனை பிரதேசத்திற்கு அனுமதிப்பத்திரமின்றி கால்நடையாக மேற்படி மாடுகளை கடத்தி சென்ற வேளையில் மேற்படி நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் 15 மாடுகளையும் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை அம்பாறை நகர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .